Wednesday, December 2, 2009

நம் காதல்.

உன்
விழிகளின் அசைவில்
வரைந்திட்ட ஓவியங்களும்
மௌன மொழியில்
அச்சிட்ட சிலைகளும்
நம் காதல்...

அம்மா...மீண்டும் என்னை சுமப்பாயா...

அம்மா.....

உன் கருவறையில்
மீண்டும் என்னை சுமப்பாயா...
உன் மடியில் தலை சாய்த்து
பொய்க் கதையின்
கனவுகளில்
கண்ணுறக்கம் எய்திட...

மீண்டும் என்னை சுமப்பாயா...
செல்ல கன்னம் கிள்ளி
நீ பதித்திடும் பாச முத்தத்தில் நனைந்திட...

மீண்டும் என்னை சுமப்பாயா...
ஒவ்வொரு மழலை சொல்லிற்கும்
நீ கூறிடும் ஓராயிரம் அர்த்தங்களை கேட்டிட...

மீண்டும் என்னை சுமப்பாயா...
சுகமான உறக்கங்களை ஈரைந்து
மாதங்களாவது பெற்றிட...

மீண்டும் என்னை சுமப்பாயா...
கருவில் கலைந்தாலும் - உன்
கனவுகளில் கலையாமல் வாழ்ந்திட...

மீண்டும் என்னை சுமப்பாயா...

உன் புன்னகை.

பழுங்கினாள் வடித்த சிற்பம்
பார்க்கும் இடமெல்லாம் உனது உருவம்
கண்டோரை மயக்கும் கருவிழியால்
கண்டு மயங்கினேன் உன் புன்னகையால்...

Monday, November 30, 2009

இன்றும் நீ எனக்கு!!!

உன் புன்னகை
இன்றும்
எனக்கு புதுக் கவிதைகளாய்...

உன் கடைகண் பார்வை
இன்றும்
எனக்கு புது விடியலாய்...

உன் வெட்கம்
இன்றும்
எனக்கு புது மொழியாய்...

உன் மௌனம்
இன்றும்
எனக்கு புது அர்த்தங்களாய்...

இன்றும்
நீ
எனக்கு புதிய கனவுகளாய்...

Sunday, November 29, 2009

மகள்.

பிரமன்
வரைந்து முடிக்காத
புதுக் கவிதை...
என் மகள்...

ஜீவனில்லாக் கவிதை.

உன்
கண்களின் வார்த்தைகளை
கவனிக்க மறந்து
பல நூறு கவிதைகளை
வாசித்தேன்...

உனக்கு காதல் லிகிதம் வரைந்திட...

வரைந்திட்ட வார்த்தைகள் எல்லாம்
வாசகங்கலாய் மட்டுமே...

ஜீவனில்லாமல்...

நீ...

புதிதாய் ஒரு புகைப்படம்...
நிழல் படம் கூட நிஜமாய்
எனக்கு...
உன்
கண்களும் கவிதைகளாய்...
புன்னகையும் வார்த்தைகளாய்...
பார்வையும் பாதைகளாய் தோன்றுதடி...